பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

இதயம்
ஃஃஃஃஃஃ

இதயமே என் இதயமே எங்கே போகின்றாய் //
இகமதில் என் எண்ணங்களே எங்கே போகின்றாய் //
மனசுக்குள் மத்தாப்பூ விரிந்து பூக்குமே //
மெளனமே நீயுமோ என்னைக் கொல்கின்றாய் //
சிரிப்பதும் அழுவதும் உன்னெஞ்சும் அல்லவா //
ஆற்றிட வேண்டுமே அறிவால் நீயென்றும் //
மாற்றியும் வைக்கின்றார் இதயம் பார்புள்ள //
மறந்துமே கவலையை தூக்கியெறி புள்ள //
நினைப்பதும் மறப்பதும் இதயம் தான்புள்ள //
ஈனத்தை மறந்துநீ இயல்பாய் எழும்புவாய் //

பூட்டிய கூட்டுக்குள் ஆவி துடிக்குதே //
போனால் வந்திடுமா புரிய வேண்டுமே //

ஏற்றிய தீபத்திலே ஒளியும் மிளிருமே //
காட்டிய பாதையிலே கால்கள் செல்லுமே //
கருணையை நினைத்துமே கடமை செல்லுமே //
காலம் போற்ற வாழ்வாய்யென்றால் இதயம் வாழுமே //

சிவருபன் சர்வேஸ்வரி
✍✍🌸🌸

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading