சிவரூபன் சர்வேஸ்வரி

இதயம்
ஃஃஃஃஃஃ

இதயமே என் இதயமே எங்கே போகின்றாய் //
இகமதில் என் எண்ணங்களே எங்கே போகின்றாய் //
மனசுக்குள் மத்தாப்பூ விரிந்து பூக்குமே //
மெளனமே நீயுமோ என்னைக் கொல்கின்றாய் //
சிரிப்பதும் அழுவதும் உன்னெஞ்சும் அல்லவா //
ஆற்றிட வேண்டுமே அறிவால் நீயென்றும் //
மாற்றியும் வைக்கின்றார் இதயம் பார்புள்ள //
மறந்துமே கவலையை தூக்கியெறி புள்ள //
நினைப்பதும் மறப்பதும் இதயம் தான்புள்ள //
ஈனத்தை மறந்துநீ இயல்பாய் எழும்புவாய் //

பூட்டிய கூட்டுக்குள் ஆவி துடிக்குதே //
போனால் வந்திடுமா புரிய வேண்டுமே //

ஏற்றிய தீபத்திலே ஒளியும் மிளிருமே //
காட்டிய பாதையிலே கால்கள் செல்லுமே //
கருணையை நினைத்துமே கடமை செல்லுமே //
காலம் போற்ற வாழ்வாய்யென்றால் இதயம் வாழுமே //

சிவருபன் சர்வேஸ்வரி
✍✍🌸🌸

Nada Mohan
Author: Nada Mohan

    சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

    Continue reading