இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் __53

“மிருகங்களின் அட்டகாசம்”

வீட்டு தோட்டமதில் விதம் விதமாய்
காய் கனிகள்
விணாக்கும் விந்தை மிருகம்
விளையாட்டாய் நடக்குது!!

வாழை குலையை குரங்கு
வாரி வாரி தின்னுது
மாங்காயை
கொப்பு கொப்பாய்
கொட்டி தள்ளுது
தேசிக்காயை
சேதம்மாக்குதே!

தேசம் கடந்து ஓடுதே
மரம் விட்டு மரம்
தாவும் மந்திகளால்
மாந்தர் படும் அவலம்!!

பேசும் இதயங்கள் பேசிக் கொண்டிருந்தனவே
காற்றலையில்
காது கொடுத்தேன்
யானை வீட்டு கதவை தட்டுதாம்
வெடி கொழுத்தி எறியினமாம்
அரசு வேடிக்கை
பார்க்குதே!!

எனக்கோ புதினமாய் இருக்குது
காட்டில் வாழ்ந்த யானை கதியில்லாமல்
வீட்டுக்குள் நூழையிதே!!

யானையின் பலம்
உங்களுக்கு தெரியுமா
சுவரில் முட்டினால்
விடே இடிந்துடுமே
விணாய் போகும் எம் சொத்து
யார் இதை பற்றி கவலைபட போகினம்!!

இன் நிலை மாறுமா
மாற்று வழி கிடைக்குமா!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading