சிவா சிவதர்சன்

[ வாரம் 218 ]
“சுடர்”

அறிவுச்சுடரேற்றி அறியாமையிருள் போக்கும்
ஆன்றோர் தம்பெருமை உலகெங்கும் போற்றும்
அஞ்ஞானவிருளகல மனித ஆற்றலும் வளம்பெறும்
ஆற்றல் விருத்திபெற அவனியும் நனிசிறந்து விளங்கிடுமே

மதங்களின் தோற்றம் மனிதமனங்களின் இருள்போக்கும்
மதவழிபாடுகள் ஆன்மீக ஈடேற்றம் அதன் நோக்கம்
மதச்சடங்குகளில் சுடர் ஏற்றல் அதன் விளக்கம்
மதங்களில் இடம்பெறுமா இருட்டினில் அரங்கேற்றம்?

சுடரொளி வீசி மெழுகுவர்த்தி தன்னையே மாய்க்கும் இடரினும்தளரா மனஉறுதியில் ஆகுதியாகும் பொதுநலம்
இனம் வாழ தன்னுயிரீந்த ஆயிரம் தியாகச்சுடர்கள்
மனம் வாழ்த்தும் மாவீரர் விண்ணில் ஒளி வீசும் ஈகைச்சுடர்கள்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading