சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 218 ]
“சுடர்”

அறிவுச்சுடரேற்றி அறியாமையிருள் போக்கும்
ஆன்றோர் தம்பெருமை உலகெங்கும் போற்றும்
அஞ்ஞானவிருளகல மனித ஆற்றலும் வளம்பெறும்
ஆற்றல் விருத்திபெற அவனியும் நனிசிறந்து விளங்கிடுமே

மதங்களின் தோற்றம் மனிதமனங்களின் இருள்போக்கும்
மதவழிபாடுகள் ஆன்மீக ஈடேற்றம் அதன் நோக்கம்
மதச்சடங்குகளில் சுடர் ஏற்றல் அதன் விளக்கம்
மதங்களில் இடம்பெறுமா இருட்டினில் அரங்கேற்றம்?

சுடரொளி வீசி மெழுகுவர்த்தி தன்னையே மாய்க்கும் இடரினும்தளரா மனஉறுதியில் ஆகுதியாகும் பொதுநலம்
இனம் வாழ தன்னுயிரீந்த ஆயிரம் தியாகச்சுடர்கள்
மனம் வாழ்த்தும் மாவீரர் விண்ணில் ஒளி வீசும் ஈகைச்சுடர்கள்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading