பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 204

*”குழந்தை”*

நிறைவாகவே செய்தனை இறைவா! நின்படைப்பில் குறையேதுமில்லை
நிறையும் குறையும் குழந்தை வளரும் சூழலே எல்லை
மழைத்துளி மண்ணைத்தொடும்வரை காத்திருக்கும் தாய்மை
மண்ணின் மாசுடன் கலந்து குணம்மாறுதல் இயற்கை

பிறப்பு முதல் இறப்புவரை மனிதவாழ்வில் பலபருவம்
மாசறு வெள்ளை உள்ளங்கொண்ட பொற்காலம் குழந்தைப்பருவம்
அன்னை மடியில் ஊட்டும் அமுதுடன் ஒழுக்கமும் அறிவும் இணையும்
ஐந்தில் பெற்ற அறிவே ஒருவனை ஆயுள் முழுவதும் உயர்த்தும்

பசுமரத்தாணிபோற் பதிந்திடும் இளமையிற்கல்வி
பெரியோரைப் பேணலும் நல்லொழுக்கமும் பெருக்கிடச்செல்லும் பள்ளி
மதிப்பின் பெருமையும் அவமதிப்பின் சிறுமையும் அடைந்ததை எண்ணி
மனதில் அமைதி நிலவிடும் நற்குழந்தையின் விருத்தி.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading