மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 256 ]
“வேலியடைப்போம்”

விதைப்பதற்கு முன்னே வேலி அடைக்கவேண்டும்
கடன் பெற்றவன் கேட்காமலே தரும்படி கொடுத்தல் விவேகம்
யூதர்களுக்கே உரிய மூளை தமிழருக்குமுண்டு எனக்காட்டும்
ஒருசொல் பலபொருள் தரும் சிறப்பு தமிழுக்கே பெருமை

நிலத்திற்கு வேலியிட்டு உரிமையை நிலைநாட்டுபவன்
நாலுவேலி நிலத்தில் வாழ்க்கையை வளமாக்குவான்
எல்லைமீறும் ஆசைகளுக்கு முதலில் வேலியடை
தொல்லை தரும் துன்பங்களை அதுவே தடுக்கும் அணை

பள்ளி செல்லும் சிறுவனைப்பார் கையில் காசில்லை
கண்ணில் படும் பண்டமெல்லாம் தின்றுவிட ஆசை
களவுக்கும் தயாராக்கும் மனதில் ஒருநப்பாசை
நல்லவேளை! அன்னையின் போதனை அவனைத்தடுத்தது

வேலியின்றி தரவையாய் கிடக்கும் நிலத்தைப்பார்
நல்லவையாய் அவை மாறி நற்பயன் தராதா கேள்
வேண்டிய நேரத்தில் வேலியிட்டுப்பராமரித்தால்
தலைமுறை சரியாகுமா? தக்க பலன் கிட்டாது போய்விடுமா?

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading