முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

சிவா சிவதர்ஷன்

[ வாரம் 216 ]
“நீர்க்குமிழி”

நீர்க்குமிழி ஒக்கும் மானிடர் வாழ்வு
நிலையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா?
நினைத்து நினைத்து மாய்வதனால் வளம் பெறுமா?
நிலையான விடிவொன்று உண்டு எனில் அது மரணம் தானா?

நீர்க்குமிழி போலும் வாழ்வும் தோன்றி மறையுமல்லவா?
நிரந்தரமாய் மனிதர் வாழ்வில் எஞ்சுவது எதுவுமில்லையா?
வானிருந்து வையகத்து வாழ வந்த உயிர்துளிகள்
வாழ்ந்து காட்ட தேடவேண்டும் நேர்வழிகள்

இடையிடையே வந்துறுத்தும் இயற்கை தரும் கடுமிடர்கள்
இணையாக வாழ்வுதனைக்காவு கொள்ளும் விதிபின்னும் சதிவலைகள்
வாழ்க்கையில் என்றும் மாற்றமிலா நிகழ்வாம் இறப்பெனும் இறுதி
வாழுகின்ற மனிதர்க்கெல்லாம் நீர்க்குமிழி காட்டும் பாடம் உறுதி.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading