மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 23-06-2022
ஆக்கம் – 39
மீளெழும் காலம்

காலம் காலமாய் தொடரும்
உள்நாட்டுப் போர்களாலும்
கொடூர ஆட்சியாளர்களாலும்
அகதியாகின்றார்கள் மக்கள் உலகமெங்கும்

அகதியெனும் ஓற்றைச் சொல்
ஆயிரம் வலிகள் சுமக்கும்
இழப்பதற்கு ஏதுமின்றி நிற்கும் போது
உலகமே இருள் சூழ்ந்து சூனியமாகும்

தாய் மண்ணை விட்டு தாயை தவிக்க விட்டு
ஊரைப் பிரிந்து உறவுகளைப் பிரிந்து
உயிர்காக்க பல நாடுகளை தேடி-இன்றும்
அலைந்து திரிகின்றார்கள் இந்தக் கணம்வரையிலும்

வாழ்க்கையே போராட்டக்களமாகும்
காலங்களே காயங்களை ஆற்றும்
மீளெழும் காலத்தை உருவாக்குவோம்
அகதியெனும் சொல்லை அகராதியில் நீக்குவோம்

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
21-06-2022

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading