பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

ஜதுர்ஷிகா விஜயகுமார்

என் நண்பியே எல்லாமே

இசை எனக்கு
பிடிக்கும் என்றேன்.
சங்கீதத்திலே பெயர்
வைத்து கொண்டாய்.

உன்னுடன் பழகுவது
பிடிக்கும் என்றேன்.
இன்னும் நெருக்கமாக
பழகி கொண்டாய்.

உன்னை எனக்கு
பிடிக்கும் என்றேன்.
அதை விட என்னை
பிடிக்கும் என்றாய்.

உன் கண்ணழகு
பிடிக்கும் என்றேன்.
கண்ணால் மௌனமாய்
பேசிக் கொண்டாய்.

உன்னை பிரிவதில்
விருப்பம் இல்லையென்றேன்.
உன்னுடனே என்னை
அழைத்து செல்கின்றாய்.

என்றும் உன் உயிர்
நண்பியாக நான்
இருக்க உன்னுடைய
இதயத்தில் எனக்கு
இடம் கொடுப்பாயா?

விஜயகுமார் ஜதுர்ஷிகா
முல்லைத்தீவு உடுப்புக்குளம்.

Nada Mohan
Author: Nada Mohan