ஜதுர்ஷிகா விஜயகுமார்

கண் அழகி நீயே பெண்ணே
****~~~~~****~~~~~****~~~~~

தெளிந்து ஓடும் நீரிலே
தத்தி நீந்தும்
சிறு மீனை
போல,

உன் அழகு
முகத்திலே நீ
சிமிட்டும் உன்
கண்ணை பார்.

வானம் சூழ்ந்து
நிற்கும்
கார் மேகம்
போல,

அந்த கருவிழி
கண்ணினாலே
என்னை முழுதாய்
சூழ்ந்து கவர்ந்தவளே

இந்த ஒரு
ஜென்மம் போதும்
உன் கண்ணழகை
இரசிக்க மட்டும்

என்ன மாயம்
செய்தாயோ நீ
ஏனோ தெரிய வில்லை,

உன் கண்ணை
மட்டுமே தேடுகிறது
என் கண்கள்.

நீ புருவம்
தூக்கி கோபித்தாலும்
இன்னும் உன்
அழகு கூடுதே.

பெண்ணே உன்
கண் அழகின்
ரகசியம் எதுவென
எனக்கு சொல்வாயா?

*********
ஜதுர்ஷிகா விஜயகுமார்
முல்லைத்தீவு உடுப்புக்குளம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading