அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

ஜெபா ஶ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-39
04-06-2024

பெண்ணே

பெண்ணே விடுகதையா நீ??
தாய்மைக்கு கிடைத்த வரமா நீ??
புன்சிரிப்பு கொண்டவளே…
புன்னகையெனும் முகமூடி போலியென
உன் நகை குறுநகை புரிவது தெரிகிறதா??

குடும்பம் தழைக்க உரமிடுபவளே
குத்துவிளக்காய் ஒளி தருபவளே
மெழுகுவர்த்தியாய் உருகுபவளே
பொன்னைப் போல தரம் உயருபவளே
பூவைப் போல மென்மையானவளே

வலிகள் என்பது வளப்படுத்தவல்லவா
கனவு கண்டு, முயன்று நீ
முன்னேறிடு பெண்ணே
தினம் தினம் சில நிமிடம்
உனக்காய் ஒதுக்கிடு கண்ணே!

வரும் தடையனைத்தும்
படி தாண்டிப் பறந்திடும் பெண்ணே
முயற்சியை மூச்சாய் சுவாசித்து
உனை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு பெண்ணே!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading