03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-14
24-08-2023
என்று தீரும்…
ஆண்டுகள் பலவாகி
ஆறாத வலியாகி
வேண்டிய தீர்வைத்
தருவார் யார் எமக்கு?
வீட்டிற்குள்ளே புதைந்து
போன குடும்பங்களும்
ஆற்றுக்குள்ளே அடங்கிப்
போன உறவுகளும்
மண்ணுக்குள் விதைக்கப்பட்ட
மாவீரச் செல்வத்தின்,
தமிழீழத் தாகத்தின்
நீங்காத மூச்சுக்களும்
மறைக்கப்பட்ட பல உறவு
இறைக்கப்பட்ட நீராச்சு
சொல்லவொணா சோகங்கள்
சொல்லிக் கொண்டு போகலாம்.
பஞ்சுமெத்தை கட்டிலிலே படுத்துறங்கினாலும்
நெஞ்சுக்குள்ளே நெருடுதிங்கே
அங்காங்கே வலிகள்!
என்று தீரும் இன்று தீரும்
வெம்பி நின்றிராமல்
விட்ட காலம் இனியும் நீண்டுடாமல்
நின்று திரும்பிப் பார்ப்போமே!
நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...