” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-23

05-12-2023

கலவரம்

கலவரங்கள் கொண்ட பூமியிலே
நிலவரத்தை மாற்ற வழியேதுமுண்டோ??
சிலவரங்கள் நீ புரியாமல்
பலவரங்கள் கேட்டென்ன பலன்!

வரலாற்றைப் பாடமாகக் கற்ற நீ
வரலாற்றில் சில பாடத்தையும் கற்று விடு
மணலாற்றில் அடிபாடு என்றிராமல்
மனவாற்றில் அடிபாடு அற்றவராயிரு

மனித நேயத்தை மரணிக்க விட்டால்
புனிதமாக வாழ்ந்திட மாட்டோம்
மாற்றான் துயரம் ஏந்தி வாழ்ந்தால்
தோற்றான் எவரும் இவ் உலகினிலில்லை!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan