அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

திருநங்கை

தள்ளிவைத்து பிறிம்பு காட்டும் உலகம்
எள்ளி நகையாடி ஒட்டாதே விலகும்
அள்ளி அரவணைத்த அன்னையும் இல்லை
சொல்லவோ வேதனை தந்தையும் இல்லை

மரணத்தை உண்டுபண்ணும் கிருமிகளா இவர்கள்
மனிதரென கருதாமல் இடையிலென்ன சுவர்கள்
சுரப்பதன் குறைபாட்டால் அர்த்தமற்றுப் போவதா
பிரம்மனது படைப்பொன்று இப்படியும் ஆவதா

சரிசெய்ய முடியாத ஆண்டவன் பிழையிது
பரிதாபம் தேடுகின்ற புதுப்பாலின் நிலையிது
ஆணில் பாதியுமாய் பெண்ணில் பாதியுமாய்
காணும் காட்சிகளில் கவலைகளே மீதியுமாய்

உள்ளத்து ஆசைகள் இவர்களிற்கும் உண்டு
வெள்ளை மனங்கொண்ட அவர்களைக் கண்டு
உறவாகி பாசத்தைப் பொழிவது என்று
உருவாகும் நல்ல சமுதாயம் அன்று

ஜெயம்
04-07-2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading