இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 663

தன்னை அறிந்தவன்

வாழ்க்கைப் பயணம் செல்கின்றது அழகாக
நாளும் புதுப்புது அனுபவம் தெளிவாக
வேகத்தடைகள் போடவென சில நிகழும்
கடுமையைக் கடந்துவிட மகிழ்ச்சியில் முற்றும்

போனதும் வந்ததும் இனி வரப்போவதும்
இன்பதுன்பத்தை இரண்டறக் கலந்தே தரும்
இருப்பினும் பூ வாசமாகவே பூக்கின்றது
புரிதலால் புதிதான மதிப்பான வாழ்க்கை

எவ்வாறு பேசுவதென காலந்தாழ்த்தியே கற்றது
மெளனம் நிறைய சந்தர்ப்பங்களில் பாதுகாத்தது
சூழ்நிலையை மாற்றப்போய் பட்டதெல்லாம் அவமானம்
சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுவதென முடிவு

அனுபவம் ஒருவரை எப்படியும் மாற்றிவிடும்
சரிந்து விழாமல் வாழவும் தெரிந்தது
வந்து சேர்வதெல்லாம் வந்தே சேரும்
விரும்பிய வாழ்க்கையை தேடியே நகர்வு

பிடிக்காத மனிதர்கள் பலரைச் சந்திப்பு
பிடித்த மனிதர்களுடன் பிடிப்போடு பேச்சு
தன்னையே தான் அறிந்த ஓர்நிலை
சிக்கத்தான் வைத்திடுமா துன்ப வலை

ஜெயம்
14-09-2023

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading