அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

வாழ்வின் கூத்து

அழுது பயனில்லை நடப்பது நடந்தேறும்
தொழுதும் பலனில்லை இல்லையிங்கு ஒருபேறும்
எழுதப்பட்ட விதிப்படியே சேர்வதெல்லாம் சேரும்
அழுகிவிடும் செடியதுவும் பழுதுபட வேரும்

ஒழிகின்ற பிறவியிது அறிந்துவிடு நெஞ்சே
அழிந்துவிடும் தீயினிலே அலையுமிந்த பஞ்சே
மண்கொண்ட உறவுமது  உண்மையெனத் தெரியும்
கண்மாயம் செய்ததென பின்நாளில் புரியும்

இன்பத்தை தேடித்தேடி அலையுமிந்த தேகம்
துன்பத்தின் பிடியினிலே சிக்கியும்தான் நோகும்
மெய் வாழ்வென நம்பி விரும்பிய யாரும்
பொய்யாகிட கலங்கி புலம்பியழ நேரும்

ஜெயம்
30-07-2022

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading