பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

https://linksharing.samsungcloud.com/kYJ4tgv0N3uN

சசிச

விடியல்

இன்னும் மாதர்க்கு வரவில்லை விடியல் 
பெண்களின் வாழ்க்கையின்னும் ஆண்களின் பிடியில்
மண்ணிலே சிலரின்னும் அரக்கர்கள் வடிவில்
இன்றும் உரிமைகளில்லை என்பதாக முடிவில்

பாட்டிலே மானே தேனேயென புழுகிடுவார்
ஏட்டிலே புகழ்ந்து போற்றி எழுதிடுவார்
வீட்டிலே அடங்கி வாழும் பிறவியானாள்
கூட்டிலே அடைபட்டுக் கிடக்கும் பறவையானாள்

கேளடி பெண்ணே நீயுன்னையே புரிந்தால்
ஏழடியாகும் இமயமும் நீ நிமிர்ந்தால்
ஆளப் பிறந்த பூலோகத்தின் ஜென்மம்
வாழப் பயந்து ஏங்குவதுமேன் இன்னும்

நிலவென்பார் மலரென்பார் சிலையென்பார் மயங்கிடாதே
அழகென்பார் அமுதென்பார் அவர்கழுக்கு இடங்கொடாதே
அளவில்லா பொய்யுரைப்பார் உணர்வுகளுள் உடைந்திடாதே
உளத்திலுள்ள நம்மிக்கையை எந்நாளும் கைவிடாதே

புதுமைப்பெண் என்பதுவும் சொல்லளவில் மட்டும்
பதுமையவள்  உளக்குமுறல் யார்செவிக்கு எட்டும்
இதுவரையில் கிடைக்கவில்லை சரிக்குச்சரி உரிமை
எதுவரைக்கும் சுமப்பாளோ பேதையவள் சிலுவை.

ஜெயம்
20-03-2023

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading