மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 645

கிடைத்தற்கரிய அருங்கொடையாம்

பட்டை தீட்டினால்தான் வைரம் பொலிவாகும்
பட்டு உணர்வதிலே வாழ்க்கை தெளிவாகும்
புற்களையும் பதர்களையும்விட மானுடம் பெருமை
இற்றைவரை இவ்வுலகில் கண்டதெல்லாம் அருமை

இன்பம் விட்டுச் சென்றாலும் விலகி
துன்பம் தொடரினும் ஒட்டியே பழகி
கண்டெடுத்த புதையலாய் பூலோக வாழ்வு
கொண்டாடிக் கழிக்கையிலே வந்திடுமோ தாழ்வு

விரைகின்றது நரைதிரை வரைந்தே காலம்
கரைந்து நிழலும் தள்ளாடும் கோலம்
உரைக்கின்றது விதி தேகம் நிலையில்லையென
தரைமேல் பூப்பெதெல்லாம் பூத்தபின்னே வாடுமென

நல்லதோ கெட்டதோ வாழ்க்கையிங்கு பூரணமாக
வல்லவராம் பரம்பொருளும் ஆட்டத்திற்கு காரணமாக
உள்ளத்திற்கு பிடித்தபடி பயணம் நகர்கின்றது
எள்ளலவும் குறைவின்றி காலமும் பகிர்கின்றது

சொந்தமென்றும் உறவென்றும் சொர்க்கமது பூமியாக
இந்தநிலை தந்ததந்த வணங்குகின்ற சாமியாக
பந்தின்மேலே வாய்த்ததிந்த மானிடத்து ஜென்மம்
வந்திடாதோ மறுபடியும் வையகத்தில் இன்னும்

ஜெயம்

22-03-2023

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading