நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

சுடர்

மாயிருள் போர்வையை அகற்றி விடும்
பேயிருக்கும் கண்டு இதனை போயிருக்கும்
ஞாயிறு உண்டாக்கிடும் பகலை செங்கதிரால்
தேயினும் உருக்கி பெருக்கிவிடும் நிலவும்

சோதிமயமானவரே இந்த பிரபஞ்ச நாயகன்
ஆதி முதலாய் முன்னோர்களின் இறை
மோதினால் சருகுகளை பஸ்பம் ஆக்கிவிடும்
மேதினியின் செல்வமே இருளகற்றும்  விளக்கு

ஒரு பொருள் உருக வேண்டுமானால்
பெருக வேண்டும் ஒளியும் அதனால்
துருவப் பனியும் மெழுகனவே கரையும்
திருமந்திரத்திலும் இருக்கின்றது அக்கினியின் உரையும்

உள்சூடும் மிகுந்தால் உடம்பும் இளைத்துவிடும்
இல்லாமல் வெப்பம் செரிமானமும் பசியுமில்லை
தொல்லை தரவெனவே குளிரும் அடம்பிடிக்கும்
சொல்வேனொன்று சுடர் இரையாகின்றது இறையுமாகின்றது

ஜெயம்
09-04-2023

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கார்த்திகை இருபத்தியேழு... கணதியின் ரணமாய் கங்கையில் விழியாய் கோரமே நினைவாய் கொன்றழிப்புகள் நிதமாய் வலிகளைச் சுமந்திட்ட வரலாற்று இனமே கார்த்திகை...

    Continue reading