தங்கசாமி தவக்குமார் av

வியாழன் கவி : வியப்பின் விழிகள்

கொட்டி கொடுத்து நிற்கும் இயற்கை
நம் உள்ளம் எல்லாம் கொள்ளை போக அது அற்புதம்
கண்ணை மூடி கொண்டாலும்
வியப்பின் விழிகள் பரந்தே தொடர்கிறது
உண்ணவும் உறங்கவும் கையேந்த உலகை
தொழில் நுட்ப தொற்று நோய்
போட்டி உலகை வளர்கிறது
பல நூறு உயிர் பலி கண்டே தொடர்கிறது
வியப்பின் விழிகள் படர்கிறது மீண்டும் கானகம் தேடி மனம் பாய்கிறது
மாசு படா கற்றையும் மனிதமும் தேடி வியப்பின் விழிகள் கசிகிறது!!!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading