அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

தடுமாறும் உலகில்

தடுமாறும் உலகில்

தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு
இகமதில் எண்ணம் ஈடேற்றம் கொண்டால்
இத்தரை சிறக்கும் இனிதாகப் பாடுபடு
கண்ணியம் கருத்தாய் காலத்தில் மேம்படவும்
உள்ளத்தில் என்றும் உணர்வு மெய்ப்படவும்
கயமைகள் விரட்டியே கலைமானாக உலவிவரவே
மடமைகளைத் தவிர்ப்பாய் மாநிலம் மகிழவே
ஆளும் நல்லதோர் உரிமை உனக்கேயாகும்
வண்ண நிலவு தோற்பது இல்லையே
வங்கக்கடலும் தூர்வது உண்டா பாரு
சங்கம் வளர்த்து சாதனை செய்வாய்
அங்கமாகவே அகிலத்தில் நடப்பாய் நன்றே
சர்வேஸ்வரி சிவரூபன்

Author:

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading