தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

வியாழன் கவிதை நேரம்!! கவிதை-2311 தண்ணீருக்காய்த் திரளும் போர் மேகங்கள்..!! ஆழக்கடலைக் கடக்கின்ற அத்தனை கப்பல்களும் அள்ளிக் கொணரும் நமக்காய் அத்தியாவசியப் பொருட்களை.. அந்தோ...

Continue reading

தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள்

ராணி சம்பந்தர் மண்ணிற்கும் விண்ணுக்குமே மழை நீரில் ஏணிகட்டி குதூகல கொண்டாடத் தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள் தாகம் சுழலும்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள்..

வசந்தா ஜெகதீசன் தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள்... வரட்சி நிலைபோக்கிடுமே வளமது திரண்டிடுமே கார்மேகக் கறுக்கலிலே கனமழை பெய்திடுமே காரியத்தின் சித்திகளும் கைகூடும்...

Continue reading

தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள்

ராணி சம்பந்தர்

மண்ணிற்கும் விண்ணுக்குமே
மழை நீரில் ஏணிகட்டி குதூகல
கொண்டாடத் தண்ணீரிற்காய்
திரளும் போர் மேகங்கள் தாகம்

சுழலும் பூமிப் பந்தின் அதிக நீர்
பரப்பின் கதாநாயகன் கடல் துளி
வெப்பநிலை மாறிட ஆவி மேலே
உருளும் வேகம்

முட்டி மோதிக் களைத்த கருமேகம்
பட்ட குளிரில் கரைந்து மழைநீராக
மண்ணிற்குள் கொட்டும் மோகம்

நீரின்றி வாடும் பயிர் போல உயிரும்
உடலை விட்டு ஓடும் சோகம்
பாரினில் நீரின்றி எதுவும் அசையாது
இதுவே நன்மையும் தரும்
அதுவே அள்ளிக் கொட்டும் மழை
வெள்ளமதில் தீமையும் வருமே .

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading