அன்னை 105

ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026

அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச் சொல்லி
பீதி மனதகற்றி போதிய அறிவூட்டி

ஊக்கம் பல அளித்து உயர்வித்து
காக்கும் எம் காவல் தெய்வமே
சோதனை எமை சாராமல் எதிர்த்து
சாதனையை உரமாய் தந்தவள் நீயே

வருந்தும் வேளை மடிதனைத் தந்து
விருந்து கொடுத்து விடைபெறும் போது
வில்லிடை தாங்கி வழிகாட்டி நீயே
நல்லிடம் புகட்டும் ஞாலச் சுடரே

கொஞ்சம் பிஸியென்றால் கணகணப்பு
மிஞ்சும்பல முணுமுணுப்பு அன்னையே
பக்கத்தில் நானிருக்க சூரியக்கதிராய்
எக்காலமும் பளிச்சென்ற முகபொலிப்பு!

Jeba Sri
Author: Jeba Sri

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading