அன்னை 105

ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026

அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச் சொல்லி
பீதி மனதகற்றி போதிய அறிவூட்டி

ஊக்கம் பல அளித்து உயர்வித்து
காக்கும் எம் காவல் தெய்வமே
சோதனை எமை சாராமல் எதிர்த்து
சாதனையை உரமாய் தந்தவள் நீயே

வருந்தும் வேளை மடிதனைத் தந்து
விருந்து கொடுத்து விடைபெறும் போது
வில்லிடை தாங்கி வழிகாட்டி நீயே
நல்லிடம் புகட்டும் ஞாலச் சுடரே

கொஞ்சம் பிஸியென்றால் கணகணப்பு
மிஞ்சும்பல முணுமுணுப்பு அன்னையே
பக்கத்தில் நானிருக்க சூரியக்கதிராய்
எக்காலமும் பளிச்சென்ற முகபொலிப்பு!

Jeba Sri
Author: Jeba Sri

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading