தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

வியாழன் கவிதை நேரம்!!
கவிதை-2311
தண்ணீருக்காய்த் திரளும்
போர் மேகங்கள்..!!

ஆழக்கடலைக் கடக்கின்ற
அத்தனை கப்பல்களும்
அள்ளிக் கொணரும் நமக்காய்
அத்தியாவசியப் பொருட்களை..

அந்தோ எப்படிச் சூழ்ந்தன
போர் மேகங்கள் கருந்துயர் தர
வான் முட்டிய கட்டடங்கள்
உயிர்கள் பல்லாயிரம் அழிந்திட..

தீப்பொறி கக்கும் விமானங்கள்
ஆயிரம் மைல்கள் தாண்டும்
எறிகணை வீச்சுக்கள் என்றே
அறம் இன்றி உயர்ந்த பொருளாதாரம்..

தண்ணீருக்காய் திரண்டன
கண்ணீரை அல்லவா தந்தன
கையிருப்புகள் கரைய கலையுமோ
நம் வாழ்வியல் கனவுகளே..
சிவதர்சனி இரா
26/3/2026

Author:

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading