தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

வியாழன் கவிதை நேரம்!!
கவிதை-2311
தண்ணீருக்காய்த் திரளும்
போர் மேகங்கள்..!!

ஆழக்கடலைக் கடக்கின்ற
அத்தனை கப்பல்களும்
அள்ளிக் கொணரும் நமக்காய்
அத்தியாவசியப் பொருட்களை..

அந்தோ எப்படிச் சூழ்ந்தன
போர் மேகங்கள் கருந்துயர் தர
வான் முட்டிய கட்டடங்கள்
உயிர்கள் பல்லாயிரம் அழிந்திட..

தீப்பொறி கக்கும் விமானங்கள்
ஆயிரம் மைல்கள் தாண்டும்
எறிகணை வீச்சுக்கள் என்றே
அறம் இன்றி உயர்ந்த பொருளாதாரம்..

தண்ணீருக்காய் திரண்டன
கண்ணீரை அல்லவா தந்தன
கையிருப்புகள் கரைய கலையுமோ
நம் வாழ்வியல் கனவுகளே..
சிவதர்சனி இரா
26/3/2026

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading