தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள்

ராணி சம்பந்தர்

மண்ணிற்கும் விண்ணுக்குமே
மழை நீரில் ஏணிகட்டி குதூகல
கொண்டாடத் தண்ணீரிற்காய்
திரளும் போர் மேகங்கள் தாகம்

சுழலும் பூமிப் பந்தின் அதிக நீர்
பரப்பின் கதாநாயகன் கடல் துளி
வெப்பநிலை மாறிட ஆவி மேலே
உருளும் வேகம்

முட்டி மோதிக் களைத்த கருமேகம்
பட்ட குளிரில் கரைந்து மழைநீராக
மண்ணிற்குள் கொட்டும் மோகம்

நீரின்றி வாடும் பயிர் போல உயிரும்
உடலை விட்டு ஓடும் சோகம்
பாரினில் நீரின்றி எதுவும் அசையாது
இதுவே நன்மையும் தரும்
அதுவே அள்ளிக் கொட்டும் மழை
வெள்ளமதில் தீமையும் வருமே .

Author:

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading