பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“தண்ணீரிற்காய் திரளும் போர்மேகங்கள்”

நேவஸ் பிலிப் கவிஇல(583)

இயற்கையின் வளங்களை
அழித்ததால் மழை மறைந்து
மண்ணின் வளம் குறைந்து
மீண்டும் ஊற்றானது தண்ணீர்
மனித கண்களில் கண்ணீராய்

ஈனோரின் தன்நலத் தேடலிலே
இழிவான செயல் பல புரிந்தோரால்
செழிப்பான கனிம வளம் களவு போக
வருகின்ற மழை மேகம் எங்கோ தொலைய

போர் மேகம் சூழ கார் மேகம் கலைய
வான்பரப்பில் நச்சுப் புகை மூட்டம்
நாடெல்லாம் விஞ்ஞான ஆதிக்கம்
நாசமாகிப் போனது மழை மேகம்

பனியில்லை நீரில்லை மழையில்லை
வாழ்வே இல்லை என்றாகும் நிலையாகுதே
மண்ணின் முகம் பார்த்து
மழைபொழியும் மேகமே
கருணை மழை பொழியாயோ
வாடும் உயிர்களுக்கு வளமான
வாழ்வமைய,,,,,,,,,,,
நன்றி…….

Author: