“தண்ணீரிற்காய் திரளும் போர்மேகங்கள்”

நேவஸ் பிலிப் கவிஇல(583)

இயற்கையின் வளங்களை
அழித்ததால் மழை மறைந்து
மண்ணின் வளம் குறைந்து
மீண்டும் ஊற்றானது தண்ணீர்
மனித கண்களில் கண்ணீராய்

ஈனோரின் தன்நலத் தேடலிலே
இழிவான செயல் பல புரிந்தோரால்
செழிப்பான கனிம வளம் களவு போக
வருகின்ற மழை மேகம் எங்கோ தொலைய

போர் மேகம் சூழ கார் மேகம் கலைய
வான்பரப்பில் நச்சுப் புகை மூட்டம்
நாடெல்லாம் விஞ்ஞான ஆதிக்கம்
நாசமாகிப் போனது மழை மேகம்

பனியில்லை நீரில்லை மழையில்லை
வாழ்வே இல்லை என்றாகும் நிலையாகுதே
மண்ணின் முகம் பார்த்து
மழைபொழியும் மேகமே
கருணை மழை பொழியாயோ
வாடும் உயிர்களுக்கு வளமான
வாழ்வமைய,,,,,,,,,,,
நன்றி…….

Author:

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading