தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே

ஜெயம்

விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத் தாங்கும் உன்னத அதிசயம்
நிலமும் நீரோடு கலந்து பரவசம்

தண்ணீரே உன்னைத் தவித்தொரு வாழ்வா
நீரே நீயின்றி உலகும் இயங்குமா
மனித வாழ்வில் நீரே நித்தியம்
அகிலமே உணர்ந்திடு இதுவே சத்தியம்

ஒரு சொட்டு நீரினதும் அருமையறி
பெரு விருச்ச வளர்ச்சியின் இரகசியமறி
நீரின்றி தரணியில் உயிரே இல்லை
பசுமையை கண்டதன்றோ பாரதன் எல்லை

ஜெயம்
27-03-2026

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading