தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே

ஜெயம்

விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத் தாங்கும் உன்னத அதிசயம்
நிலமும் நீரோடு கலந்து பரவசம்

தண்ணீரே உன்னைத் தவித்தொரு வாழ்வா
நீரே நீயின்றி உலகும் இயங்குமா
மனித வாழ்வில் நீரே நித்தியம்
அகிலமே உணர்ந்திடு இதுவே சத்தியம்

ஒரு சொட்டு நீரினதும் அருமையறி
பெரு விருச்ச வளர்ச்சியின் இரகசியமறி
நீரின்றி தரணியில் உயிரே இல்லை
பசுமையை கண்டதன்றோ பாரதன் எல்லை

ஜெயம்
27-03-2026

Author:

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading