தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

தலைப்எபு பரவசம்

முன்எடுத்த சந்தக்கவி நிகழ்வு
மூன்றாண்டை தாண்டியதில் மகிழ்வு
இன்நிகழ்வில் பல கவிஞர் இணைவு
இவர் கவிகள் பல வடிவாய் முகிழ்வு
*ஆக்கங்கள் உள்ளத்தால் பூக்கும்
அழகாக கவிக்கு உரு சேர்க்கும்
தாக்கத்தைஉணர்வோடு கோர்க்கும்
சந்தலய கவிதைகளை ஆக்கும்
* வரிவரியாய் கவிக்கனியை பிழிந்து
வானலையில் என் உணர்வை பதிந்து
விரிந்த நிகழ் வால்உறவு மலர்ந்து
விழைந்தேனே நூல் தொகுக்க விரைந்து
*இருபதின்மர் விரும்பி அதில் இணைய
எல்லோர் தம் பங்களிப்பும் நிறைய
விரிந்த தொரு பாமுகப்பூ மலர்ந்து
வினைதிறனின் பெறுபேறாய் சிறந்து
*பேரின்ப நிலை உதிரும் பரவசம்
பெற்றேள் யான் அரியதுர அதிரசம்
ஊரும்உள உணர்வில் எழும் நவரசம்
உளம் உதிர்த்த கவிநூலின் பரவசம்

*

Nada Mohan
Author: Nada Mohan