அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

தலைப்எபு பரவசம்

முன்எடுத்த சந்தக்கவி நிகழ்வு
மூன்றாண்டை தாண்டியதில் மகிழ்வு
இன்நிகழ்வில் பல கவிஞர் இணைவு
இவர் கவிகள் பல வடிவாய் முகிழ்வு
*ஆக்கங்கள் உள்ளத்தால் பூக்கும்
அழகாக கவிக்கு உரு சேர்க்கும்
தாக்கத்தைஉணர்வோடு கோர்க்கும்
சந்தலய கவிதைகளை ஆக்கும்
* வரிவரியாய் கவிக்கனியை பிழிந்து
வானலையில் என் உணர்வை பதிந்து
விரிந்த நிகழ் வால்உறவு மலர்ந்து
விழைந்தேனே நூல் தொகுக்க விரைந்து
*இருபதின்மர் விரும்பி அதில் இணைய
எல்லோர் தம் பங்களிப்பும் நிறைய
விரிந்த தொரு பாமுகப்பூ மலர்ந்து
வினைதிறனின் பெறுபேறாய் சிறந்து
*பேரின்ப நிலை உதிரும் பரவசம்
பெற்றேள் யான் அரியதுர அதிரசம்
ஊரும்உள உணர்வில் எழும் நவரசம்
உளம் உதிர்த்த கவிநூலின் பரவசம்

*

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading