மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

தியாக தீபம்…

சிவதர்சனி இராகவன்

தியாக தீபம் இன்னும்
அணையவில்லை…!!

ஊரெழு மண் உதித்த
உத்தமனே திலீபா
நீராகாரம் தன்னும் நீ
அருந்தா பசித்திருந்தாய்
ஒன்றா இரண்டா பன்னிரு
நாட்கள் உன் உடல் மெலிய
உயிர் உருக நீ விழித்திருக்க
ஊரே உன் முன் திரண்டிருக்க
எத்தனை உள்ளங்கள்
கண்ணீர் வடித்தது அன்று..

நல்லை நகர் வீதியில்
நல்லூரான் பார்த்திருக்க
மெழுகென உருக்கினாய்
மேனி வாடியே துவண்டது
அஹிம்சை வழி வெல்லுமென
அனைவரும் உனைப்போல்
நம்பிக்கையோடே இருந்தோம்
காந்தி தேசம் இன்றும் அச்
செயலுக்காய் கூனியே நிற்க..

பார்த்தீபன் உன் கனவு
பலிக்காமல் தான் போகுமோ
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்
மக்கள் புரட்சி எம் இலக்கை
இலட்சியத்தை வென்றெடுக்கும்
என்ற உன் எண்ணம் தோற்காது
பார்போற்றும் தியாக தீபமே
இன்னும் நீபசியோடிருப்பது
நாம் அறியாததல்ல
ஓர் நாள் உன் தியாகம்
வெல்லும் தேசம் விடியும்…

கிழக்கே உதயம்
மாறவா போகுது- கதிரவன்
ஒளியைக் கையால் தான்
மறைக்கமுடியுமா? அன்றிக்
கொடு நெஞ்சர் ஆட்டம்
தொடர்ந்தே தான் இருக்குமா
உன் வழி தொழுகிறோம்
உயிர் தியாகம் வியக்கிறோம்
மூபத்தொடு ஏழு முடிந்தாலென்ன
தேசத்தாய் விடியல் விரைவிலே..!!

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading