முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காய்
சிவமணி புவனேஸ்வரன் சுவிசில் இருந்து.

*விடுமுறைக் களிப்பு.*

சீல வாழ்வு சிந்தையில் தேடி
காலங் கடந்து தேடிய பயணம்
ஞாலம் எல்லாம் நமதாய்ப் போக
பாலமானது பலவழிப் பாதை

ஓட்டமும் நடையும் ஒருதரம் ஓய
வீட்டை மறந்து விண் வரை பறந்து
கூட்டமாய் உறவொடு
கூடி மகிழ்ந்து
ஊட்ட உணவினில்
உள்ளம் மகிழ்ந்து

சின்ன ஆசைகள் சிலநாள் அடைவினில்
இன்னல் மறந்த இன்பப் பொழுதுகள்
பின்னும் ஈழம் செல்லத் துடிக்கும்
என்மனம் இன்னும்
தாய்மடி தேடும் .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading