திருமதி சிவமணி புவனேஸ்வரன்

******பாமுகமே வாழி*****

மழலை மொழியில் மகிழ்தமிழ் கானம்//
விழவுகள் பொன்னில் விரும்பும் அரும்பு//
பழந்தமிழ் போற்றிடும் பாமுகம் எம்மில்//
நிழலாய் தொடர நிலைத்து.

பைந்தமிழ் பாமுகப் பார்மகள் தீபமாய்//
வையகம் வாழ்த்திட வான்குன்றில் நின்றொளிர //
மையலும் கொண்டே மயங்கிய மாந்தரும்//
கைகூப்பி நின்றாரே காண்.

நாவலர் பேணிய நற்றமிழை நாளுமே//
தேவரீர் பாமுகம் தேசத்தே காத்திட//
ஆவலால் ஆக்கம் அனுதினம் ஆற்றவே//
பாவலர் போற்றிடப் பாங்கு.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading