மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

**** சிந்தை நிறைக்கும் சிவராத்திரி***

எந்தை ஈசன் எம்பெருமானை
சிந்தை நிறைத்து சிவராத்திரியில்
வந்தனை செய்ய வரம்பல பெருகும்
முந்தை வினையும் முழுதும் அறுமே

சிவனுக்கே உகந்த திருநாள் தேடி
தவமதாய் இருந்து தலங்கள் நாட
அவனருள் பெருகும் அகந்தை அழியும்
பவமதும் நீங்கும் பரமுத்தி கிட்டும்

ஒருநாள் இரவு முழுதும் விழித்து
பெருமான் புகழின் பெருமை சொல்லி
அருவுருவான அருட்பெரும் ஜோதியின்
திருவருள் காணும் தினம் இதுவன்றோ .

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading