பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

**** சிந்தை நிறைக்கும் சிவராத்திரி***

எந்தை ஈசன் எம்பெருமானை
சிந்தை நிறைத்து சிவராத்திரியில்
வந்தனை செய்ய வரம்பல பெருகும்
முந்தை வினையும் முழுதும் அறுமே

சிவனுக்கே உகந்த திருநாள் தேடி
தவமதாய் இருந்து தலங்கள் நாட
அவனருள் பெருகும் அகந்தை அழியும்
பவமதும் நீங்கும் பரமுத்தி கிட்டும்

ஒருநாள் இரவு முழுதும் விழித்து
பெருமான் புகழின் பெருமை சொல்லி
அருவுருவான அருட்பெரும் ஜோதியின்
திருவருள் காணும் தினம் இதுவன்றோ .

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading