இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக
சிவமணி புவனேஸ்வரன்.
சுவிஸ் இல் இருந்து.
தலைப்பு :
*சாதனை*

அடிமை விலங்கை உடைத்திடவும்
அறிவும் ஊட்டிக்
கொடுத்திடவும்

அழகாய் உலகை
ஆண்டிடவும்
அல்லல் அற்று வாழ்ந்திடவும்

அன்பின் ஊற்றால் அழகாய் உலகை
அனைவரும்
நிறைக்க வாருங்கள்

வன்பே இல்லா வாழ்வில் பூக்கும்
பாச மலரைப் பாருங்கள்

நைந்தே உருகிய நைற்றிங் கேளும்
நலமாய் உலகை
காத்தாரே
கைகள் தாங்கிய
அன்னை திரேசா
கருணை மழையை
பொழிந்தாரே

அன்பாம் விளக்கை
அழகாய் ஏந்தி
அருளாம் ஒளியைத்
தந்தாரே

வேதனை தீர்க்க விழித்தே எமக்கோ
போதனைப் பொருளும்
ஆனாரே
சோதனை பலவும்
கண்ட போதும்
சாதனை உலகைப்
படைத்தாரே

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading