திருமதி.செல்வி தெய்வேந்திரமூர்த்தி

வணக்கம் அண்ணா!

சந்தம்சிந்தும் சந்திப்பு
“”””””””””””””””””””
தலைப்பு:-மணி
“””””
மணியொன் றடிக்கும் மதிக்குள் விதியாய்
தணிக்கும் ஒலியோ தழைந்தே சுருங்கும்
பிணிகொள் உடலம் பிதற்றும் பெயரும்
அணியாய் உறவும் அணைத்தே மொழியும்

கணித்தே உரைப்பர் கடுகும் பயணம்
பணிந்த உளமோ பரவும் பரமனை
துணிவை அருகில் துணையாய் அழைக்க
மணியொன் றடித்த மலைப்பை மறந்தே

தணிப்பான் தயாவாம் தாதையை அணுக
பிணிக்கோர் மருந்தாம் பிறவா நிலையை
அணியாய் அருளும் அவனே இறையாய்
கணிக்கும் மனமே கழிவை அகற்று

பணியை அணியும் பரமன் பதத்தில்
பணிகள் இயற்றும் பதத்தை விரும்பித்
துணிந்துன் துயரம் துரத்தும் விதத்தில்
மணியொன் றடிப்பாய் மயங்கா திருந்தே!

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading