திருமதி செ.தெய்வேதிரமூர்த்தி

வணக்கம் அண்ணா.
விருப்பத் தலைப்பு:-
வெய்யோனே சீற்றமும் ஏனோ?…

அறுசீர் விருத்தம்

சீர் வரையறை..

விளம் விளம் காய்
விளம் விளம் காய்..

சூரியோய் கொட்டிநீ சூழ்நெருப்பைச்
சோகமும் தந்திட எண்ணியதேன்
பாரிடை மாந்தருன் பயிலரங்கா
பண்பினை விற்றதன் பாதகமா
மாரியள் செய்தநற் கொடையனைத்தும்
மண்மகள் வீட்டினுள் வைத்தனளே
வேரிடை ஓடியென் தேடுகிறாய்
வெம்பியே பூந்தளிர் வாடுதுபார்

காரிருள் ஆயினும் கனலகற்றாக்
காவியச் சாதனை போற்றுகின்றோம்
வாரியே தந்தெமை வறுத்தெடுக்க
வல்லமை தந்ததார் சூரியரே
பாரியைப் போலொரு எண்ணமிதோ
பார்த்திடப் பல்கதிர் பாய்ச்சுகின்றீர்
கூரிய வெம்மைகண் டோடுகின்றார்
கூட்டினுள் குஞ்சுகள் பாவமன்றோ!

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading