மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

திருமதி செ.தெய்வேந்திரமூர்த்தி

வணக்கம்!
பாவையண்ணா,கமலாக்கா!

பிள்ளைக் கனியமுது
********************

பிள்ளைக் கனியமுதே
பேசும்பொற் சித்திரமே
அள்ளி யணைத்திடவே
ஆனந்தம் பொங்கிடுதே(2)

கள்ளக் குறும்புனக்கே
காரணமே துரைப்பேன்
கண்ணை உருட்டியிங்கே
காரியஞ்செய் வதென்னே (2)

துள்ளித் திரிகையிலும்
தூளியிலா டலிலும்
தூக்கி யணைத்திடவே
துடிக்குதென துளமே
பள்ளிப் பருவத்திலே
பாதிவழி வருவேன்
பாசக் கரமிணைப்போம்
பார்த்தவர்கண் படவே
உள்ள உவப்புடனே
உன்வழிநோக் கிடுவேன்
உச்சி குளிருமன்றோ
உன்மடிநான் துயில
பள்ளந் தனிலோடும்
பாய்பொருளா னேனோ
பார்த்தன் அருளுவந்த
பாதிவிழிக் கனவோ! (இது)

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.
12- 02 – 2024.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading