இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சித்தும் சந்திப்பு – 244

தலைப்பு – கலவரம்

காசினிலே கலவரம் கரைபுரண்டு ஓடுது
பாவிகளாய் மனிதம் பாடாய் படுகுது
ஓவியமாய் நிலவரங்கள் ஓரமாய் தொங்குது
ஏமாளியாய் போகுது அறிவியல் உலகில்.

கரையாய் கடுகாய் கலவரம் கண்மூடித்தனமாய்
இரையாய் வீழ்ந்தது கலவரத்தால் குழந்தைகள்
உண்ணதமாய் வாழ்ந்தாலும் இரக்கமில்லா மனங்களால்
வள்ளலார் வழிவந்தும் வாழ்வுதான் இல்லையே.

வழிகாட்டிகள் வரலாறுகளை எவரும் கேட்கவில்லை
விழிகளிலே கண்ணீரை பார்த்தும் இரக்கமில்லை
வாழ்க்கையில் தினந்தோறும் கலவரங்கள் குறையவில்லை
வசந்தம்தர வல்லமைதர இறையருள் இணையட்டும்.

நன்றி வணக்கம்🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
1/12/2023

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading