மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சித்தும் சந்திப்பு – 244

தலைப்பு – கலவரம்

காசினிலே கலவரம் கரைபுரண்டு ஓடுது
பாவிகளாய் மனிதம் பாடாய் படுகுது
ஓவியமாய் நிலவரங்கள் ஓரமாய் தொங்குது
ஏமாளியாய் போகுது அறிவியல் உலகில்.

கரையாய் கடுகாய் கலவரம் கண்மூடித்தனமாய்
இரையாய் வீழ்ந்தது கலவரத்தால் குழந்தைகள்
உண்ணதமாய் வாழ்ந்தாலும் இரக்கமில்லா மனங்களால்
வள்ளலார் வழிவந்தும் வாழ்வுதான் இல்லையே.

வழிகாட்டிகள் வரலாறுகளை எவரும் கேட்கவில்லை
விழிகளிலே கண்ணீரை பார்த்தும் இரக்கமில்லை
வாழ்க்கையில் தினந்தோறும் கலவரங்கள் குறையவில்லை
வசந்தம்தர வல்லமைதர இறையருள் இணையட்டும்.

நன்றி வணக்கம்🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
1/12/2023

Nada Mohan
Author: Nada Mohan