” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர்🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 166

தலைப்பு — அன்றும் இன்றும்

ஆசனத்தில் பிரயாணி அமர்ந்திருக்க ரிக்க்ஷாவை
ஊசலாடாது உறுதியாய் இழுத்திடுவான் மனிதன்
தேசத்தில் அன்றிருந்த தோற்றச் சூழலிலும்
நேசமுடன் நம்மக்கள் நிம்மதியாய் வாழ்ந்தனரன்று.

எருதுகள் இழுத்திட உருவாக்கிய வண்டியை
விருப்பமுடன் சொந்தமாய் வைத்திருந்தனர் வர்த்தகர்கள்
தெருவீதிகளில் மோட்டார்வண்டிகள் தோன்றாத காலமதில்
நெருக்கமாய் நம்முன்னோர் நிம்மதியாய் வாழ்ந்தனரன்று.

வளர்ச்சியின் உச்சிக்கு விஞ்ஞானம் விரைவதால்
பலவித பயணவசதிகளும் போக்குவரத்துக்களும் உருவாகி
அளவற்ற சொகுசுகள் அதிகமாய் கிடைத்தும்
கலக்கமுடன் மனிதனின்று காட்சி தருகிறான்.

நன்றி வணக்கம்🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
15/03/2022

Nada Mohan
Author: Nada Mohan