தீதும் நன்றும்

சிவதர்சனி இரா

வியாழன் கவி 1983..!

“தீதும் நன்றும்”
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
வார்த்தளித்த செம்மல்
கணிகன் பூங்குன்றனார்
வடித்த சங்கப் பா எழில்
சந்தம் மட்டுமல்ல சரித்திரப் பா
உலகெங்கும் வாழ்பவர்
உறவென்றார் பாரீர்
வரு துன்பம் இன்பம்
நம்மாலே நமக்கென்றார்
எத்தனை அரிய பொருளை
அன்றே தந்து சென்றார்..
உணர்ந்தோமா நாமிங்கு
உளறித் திரிந்து உரிமை
கொண்டு
நம்மை நாமே அழித்தொழிக்கிறோம்
அடுத்தவர் மீதினில் பழியைப்
போட்டே தப்பிக்க நிணைத்து
தடம் மாறிப் பாதாளம்
சேர்கிறோம் இலக்கின்றி..
செய்கருமம் சேர்ந்தொழுகல்
சேவை மனப்பாங்கு யாவும்
நன்மை தரு வழி நடந்திட
வந்தேகும் வளமும் வனப்பும்
வழி கிட்டும் வலி போக்கும்
தடை என்ன மனமே நீயும்
உடைத்துவிடு தீதினை
உய்த்துவிடு வாழ்வினில்..
சிவதர்சனி இராகவன்
22/5/2024

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading