கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

தீதும் நன்றும்

சிவதர்சனி இரா

வியாழன் கவி 1983..!

“தீதும் நன்றும்”
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
வார்த்தளித்த செம்மல்
கணிகன் பூங்குன்றனார்
வடித்த சங்கப் பா எழில்
சந்தம் மட்டுமல்ல சரித்திரப் பா
உலகெங்கும் வாழ்பவர்
உறவென்றார் பாரீர்
வரு துன்பம் இன்பம்
நம்மாலே நமக்கென்றார்
எத்தனை அரிய பொருளை
அன்றே தந்து சென்றார்..
உணர்ந்தோமா நாமிங்கு
உளறித் திரிந்து உரிமை
கொண்டு
நம்மை நாமே அழித்தொழிக்கிறோம்
அடுத்தவர் மீதினில் பழியைப்
போட்டே தப்பிக்க நிணைத்து
தடம் மாறிப் பாதாளம்
சேர்கிறோம் இலக்கின்றி..
செய்கருமம் சேர்ந்தொழுகல்
சேவை மனப்பாங்கு யாவும்
நன்மை தரு வழி நடந்திட
வந்தேகும் வளமும் வனப்பும்
வழி கிட்டும் வலி போக்கும்
தடை என்ன மனமே நீயும்
உடைத்துவிடு தீதினை
உய்த்துவிடு வாழ்வினில்..
சிவதர்சனி இராகவன்
22/5/2024

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading