தீதும் நன்றும்

நகுலா சிவநாதன்

தீதும் நன்றும்

தீதும் நன்றும் திடமுடனே
தீங்கே இல்லா வாழ்வினிலே
ஓதும் மறையும் ஒளிபோலே
உளமே ஏங்கும் நனிநன்றே
மோதும் வாழ்வில் துன்பங்கள்
மோதி வந்து சென்றாலும்
காதும் கண்ணும் வைத்திங்கும்
காலம் முழுக்கப் பேசாதீர்

ஞாலம் போற்றும் வாழ்வினிலே
நன்மை செய்து வாழ்வோமே
காலம் போற்றும் நற்பெருமை
கனிந்து வாழ்வில் பெருகிடவே
பாலம் போடும் பண்பாடு
படந்து வாழ்வில் சேர்ந்திங்கு
தூலம் போடும் பொற்கதிராய்
துணிவை ஏற்றி துலங்கிடுக!

நகுலா சிவநாதன் 1763

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading