இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

துவாரகன் சாமினி

எட்டி உதைத்து
பிண்டம் கிழித்து
மண் தொடுகையில்
அன்னைக்கு ஓர் வலி

அவசர உலகில்
ஓடி ஓடி உழைத்து
ஆளாக்கப் பாடுபடும்
அப்பாக்களுக்கு பல வலி

பதினெட்டு வயது
பருவ மங்கைக்கு
வயசுக் கோளாற்றால்
காதல் வலி

வலி சுமந்த மண் விட்டு
கடல் கடந்து வந்தாலும்
தாய்நாட்டுப் பற்று
தீராத வலி

வலி வலி வலி
ஆண்டவன் வழங்கிய
அழிக்க முடியாத வரம்
வலி……..

– துவாரகன் சாமினி
10.09.2024

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading