தேவகஜன் சுவிஸ்

என் கண்கள்
பலரை பார்த்து
ரசித்திருக்கலாம்
ஆனால் என் இதயம்
உன்னை! மட்டுமே எப்போதும் ரசித்துக்கொண்டிருக்கிறது.

நீ என் ராசிக்காறி
என்னுள் நுழைந்த இடர்களை
உன் பேரன்பு சுடரால் அகற்றி
இன்பம் தந்தவள் நீ!

இருகரம் கூப்பி
நல்லருள்தாவென
இறைவனிடம் வேண்டிய
வேண்டுதல்கள்
உன் திருமுகம்
கண்ட நாள்முதலாய்
என் வாழ்வில் பலித்துக்கொள்ள
நானோ மிளிர்ந்து கொண்டேயிருக்கின்றேன்.

என்றைக்கும் உன் அன்பை
தேடியே என் மனம் தவிக்கும்
என் மீது அன்பு வைக்க
உன்னை மிஞ்ச எவருமில்லை
அதனால் தான் என்னவோ
என் இதயம் உன்னை
மட்டுமே நேசிக்கின்றது.

உந்தன் முகம் பார்க்காமலும்
உந்தன் குரல் கேட்காமலும்
எனக்கு இனிமை கிடையாது
என் இதயச்சுடரே!
உன் வாழ்நாட்களுக்குள்
என் விழிகள் மூடிடவேண்டும்
நீயில்லா வாழ்க்கை
சுடர்தராத திரியைபோன்றது.

உனதன்பு பிடிப்போடு
என் துடிப்பு அடங்கிடணும்
அன்பே! என் ஆருயிரே!

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

    Continue reading