தேவ கஜன்

நிலாவில் உலா

உன்னோடு நானிருந்த
நினைவை சுமந்தபடி
நிலாவில் உலாச்சென்றேன்
நிஜத்தில் ஒரு முறையாவது
மீண்டும் உனை கண்டு
களிப்புற மாட்டேனோ
என்ற நப்பாசையோடு
அங்கும் எனக்கு ஏமாற்றமே!

நிலா முளுவதும் தேடியும்
என் நெச்சத்தில்
பதிந்து கிடக்கும்
உன் முளுமதி முகத்தை
காணாத ஏமாற்றத்தோடு
கதிகலங்கி விட்டேன்.
காணாத தேசத்தில் நீ!
ஒளிந்திருந்து என்னை
கண்காணித்தது போதும்
கண்முன்னே வா!
காலம் முளுவதும்
உன் கைக்குள்ளே
என் வாழ்வை கடந்திடணும்.

எத்தனை வலிகளை
கடந்தவள் நீ!
அத்தனை வலிகளும்
ஆறும் முன்னே
ஆயுள் முடிந்தவளே!
எனதாயுள் நீட்சியிலும்
நிலைத்தேயிருப்பாய் நீ!

உன் ஒற்றை அன்பிலே
உச்சமான மகிழ்வை
பெற்றவன் நான்
மிச்சமான என் வாழ்வின்
மகிழ்தலுக்காய் நீ காட்டிவிட்டு
சென்ற அன்பை
நினைவில் சேமித்து
என் வலிகளுக்கு மருந்தாக
மீண்டு தடவிக்கொண்டு
ஆறிக் கடக்கின்றேன் வாழ்வை.

எனக்கு சோறூட்ட
நீ காட்டி கதை சொன்ன
நிலாவும் நீழ்வானத்தில்
இன்றும் உலாவிக்கொண்டிருக்க
உன் உலாவல் மட்டும்
அன்றோடு முடிந்ததேன்.
நிலாவை பார்கும் பொழுதுகள்
என் நிலைகளை இழக்கின்றேன்
உன் நிழலினை தேடுகின்றேன்.
அம்மா! அம்மா! அம்மா!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading