கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

நகுலவதி தில்லத்தேவன்

வியாழன் கவி 31.3.22

பாரெல்லாம் பதை பதைக்குது.

பசுமை நிறைந்த பார் இப்போ
புரட்சி நிறைந்த போர்
பழைய புதிய கட்டிடம்
ஒரு நொடியில்
தவிடுபொடியானதே
நாடு சுடுகாடானதே .

கதறிடும் மக்களின் கூட்டம்
துப்பாக்கியின் ஓசையும்
வானைப் பிளக்குது
செத்து மடியும் உயிர்கள்
அனாதைகள் வீதி எங்கும்
ஓலம்.

நாடு நாடாய் அவலம்
பாடாய் படுத்து துன்பம்
எரிபொருள் விலை உயரது
விலைவாசியும் ஏறுமுகம்
நாடுகள் கூடி பேசியே
முடிவுகள் தேடி ஓடுது
விடிவும்
காணவில்லை.

பசுமையும் இறங்கு முகம்
பாரில் தண்ணீர் பஞ்சம்
தோட்டமும் துறவும் ஓட்டம்
அவனிக்கு வருமே பஞ்சம்.

அதிபருக்கும் வாணி க்கும்
விஐயகௌரிக்கும், தொடரும்
கவி ஆய்வு தட்டிக் கொடுப்புக்கும்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading