மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

“முள்ளிவாய்க்கால்”
முள்ளிவாய்க்கால் நினைவு முகிழுகின்ற போதெல்லாம்
உள்ளூரும் உன் நினைவு
உள்ளத்தை வாட்டுகுது.

எழுபத்து ஏழில்
எழுந்த இன கலவரத்தில்
அடிபட்டு வந்த உன்னை
அகதியாய் முதல் கண்டோம்.

பெற்றோர்க்கு மூத்த
பிள்ளையாய் பொறுப்போடு
மற்றோர்க்கும் உதவும்
மனதால் எமை கவர்ந்தாய்!

கம்பன் காவியத்தில்
கண்ட சீதையைப்போல்
அம்பாள் குளத் இருந்த
அன்பான சீதா நீ.

காந்தீயம் இயக்கத்தின்
கடமைகளில் துடிப்போடு
ஈய்ந்த சேவையினால்
ஈர்த்தாய் எம் மனதை.

எண்பத்தி மூன்றில்
எழுந்த இன கலவரத்தில
புண்பட்டு வந்தோர்க்கு
புகலிட முகாம் அமைத்து

றோட்டறி கழகத்தால்
கிளிநொச்சி நகர் அருகே
ஆதரித்து நாம் இயக்க
ஆண்டு இரண்டாய் உழைத்தவளே!

ஜெயபுரத்தில் குடியேற்ற
சீவித்து அகதிகளின்
அகம் நிறைந்த உறவாக
அவர்களுடன் வாழ்ந்தவளே!

அள்ளுண்டு போன
ஆயிரமாம் உறவோடு
முள்ளி வாய்க்கால் போக
முன்னமே மடிந்தவளே!

ஷெல் விழுந்து உன்னையும்
சேர்த்தே உன் தந்தையையும்
கொல்வதென விதி எழுத்தோ
கொடுங்கோலர் பலி எடுப்போ?

ஜயா தம்பு சைவன்
ஆலயத்தை அமைத்து நிதம்
செய்த பூசை தொண்டை
சிவன் கூட மறந்தாரோ!

கொள்ளி குடம் உடைக்க
கூட ஒருவர் இன்றி
அள்ளி மணல் கொட்டி
அடக்கத்தை செய்த உந்தன்,

சிதறுண்ட உடல் சாபம்
சீரளிக்கும் சிங்களத்தை
இதயத்தில் எம்மோடு
இறவாது நீ வாழ்வாய்!
-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading