நகுலா சிவநாதன்

நூல்கள்

வண்ண நூல்கள் கற்றிட்டே
வாழ்வில் என்று உயர்வோமே
எண்ணம் யாவும் எழிலறிவு
ஏற்றம் பெற்றே மிளிர்வோமே
கண்ணில் காணும் நன்நால்கள்
கவிதைக் கலையை வளர்த்திடுமே
திண்ண மாக உலகினிலே
திடமாய் வென்று புகழாவோம்

நூல்கள் என்னும் ஆயுதமே
நுணுகிக் கற்கும் வேலாகும்
தாள்கள் கொடுக்கும் வண்ணச்சுகம்
தளிர்க்கும் செம்மை மொழியறிவு
வேல்கள் போலே கூர்மையாலே
வென்று வாழ்வில் நிலைத்திடவே
கால்கள் போலே நடைபயின்று
கணணித் தமிழாய்ப் படித்திடுக!

நகுலா சிவநாதன்1716

Nada Mohan
Author: Nada Mohan