மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

நகுலா சிவநாதன்

முள்ளிவாய்க்கால் நினைவு

முப்பது ஆண்டுப் போரில் சந்தித்த இடர்கள்
இழந்த எங்கள் தமிழின உறவுகள்
எதிரியின் தாக்குதலில் எல்லாமே அழிந்தது
அழித்தது இனவெறி அரசு

முள்ளி வாய்க்கால் அவலம்
கொள்ளி வைத்த பூமியானது
அள்ளி குவித்த அப்பாவிமக்கள் உடல்கள்
தள்ளி நின்று வேடிக்கை பார்த்த அரசு

கல்லும் கரையும் கடலலையும் பொங்கும்
கண்ணீர் மல்க செங்குருதியாறு ஓடியபூமி
செந்நெல் வயல்களும் பிணவாடைகளானது
எம் தமிழீழம் எரிமலையாய் பொங்கியது

சோகத்தின் செய்தியை சொல்லியழ யாருமில்லை
வேதனையின் விழிம்புகளில் வெந்தணல்கள் பாய்ந்ததே!
கந்தகக் காற்றின் சுவாசம் அப்பாவி மக்களை அடித்துத்தான் சென்றதோ?

;அப்பாவி குழந்தைகள் பட்டினியின் விழிம்பில் சுட்டெரித்த நாட்கள்
விட்டினி நீங்குமா? விடைதான் கிடைக்குமா?
எட்டுத்திசையும் கூக்குரல் கத்தி மடிந்ததே!

மே மாதம் 18 மறந்திட முடியுமா?
முள்ளிவாய்க்கால் படுகொலை அள்ளிச் சென்ற உறவுகளை
ஆற்றிட முடியுமா? ஆறுதல் கிடைக்குமா?
மீண்டுமொரு அழிவு இனியும் தீண்ட வேண்டாம்

நகுலா சிவநாதன் 1722

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading