தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

நகுலா சிவநாதன்

முள்ளிவாய்க்கால் நினைவு

முப்பது ஆண்டுப் போரில் சந்தித்த இடர்கள்
இழந்த எங்கள் தமிழின உறவுகள்
எதிரியின் தாக்குதலில் எல்லாமே அழிந்தது
அழித்தது இனவெறி அரசு

முள்ளி வாய்க்கால் அவலம்
கொள்ளி வைத்த பூமியானது
அள்ளி குவித்த அப்பாவிமக்கள் உடல்கள்
தள்ளி நின்று வேடிக்கை பார்த்த அரசு

கல்லும் கரையும் கடலலையும் பொங்கும்
கண்ணீர் மல்க செங்குருதியாறு ஓடியபூமி
செந்நெல் வயல்களும் பிணவாடைகளானது
எம் தமிழீழம் எரிமலையாய் பொங்கியது

சோகத்தின் செய்தியை சொல்லியழ யாருமில்லை
வேதனையின் விழிம்புகளில் வெந்தணல்கள் பாய்ந்ததே!
கந்தகக் காற்றின் சுவாசம் அப்பாவி மக்களை அடித்துத்தான் சென்றதோ?

;அப்பாவி குழந்தைகள் பட்டினியின் விழிம்பில் சுட்டெரித்த நாட்கள்
விட்டினி நீங்குமா? விடைதான் கிடைக்குமா?
எட்டுத்திசையும் கூக்குரல் கத்தி மடிந்ததே!

மே மாதம் 18 மறந்திட முடியுமா?
முள்ளிவாய்க்கால் படுகொலை அள்ளிச் சென்ற உறவுகளை
ஆற்றிட முடியுமா? ஆறுதல் கிடைக்குமா?
மீண்டுமொரு அழிவு இனியும் தீண்ட வேண்டாம்

நகுலா சிவநாதன் 1722

Nada Mohan
Author: Nada Mohan