மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

நகுலா சிவநாதன்

நல்லறிவே

அறிவின் மேன்மை ஓங்க
ஆற்றல் உண்டு பாரினிலே
நெறியின் வாழ்வு தறியாய்
நேர்மை உண்டு வாழ்வில்
பொறியின் வாழ்வு போட்டி
பொழுதும் ஈட்டும் நேரம்
செறிவாய் கிடைக்கும் அருளே!
செழிப்பாய் வாழ்வைச் சீராக்கும்
கலையாய் எழும் ஆற்றல்

பொங்கும் வலிமை மேவி
பொழுதும் புதுமை ஆகிடுமே
எங்கும் இயற்கை மதியில்
எடுத்து ஆளும் நற்திறமை
நுங்கும் பனையில் காயாய்
நுண்மை மதியும் சேர்ந்திங்கு
வங்கக் கடலும் ஓடும்
வளர வேண்டும் நல்லறிவே

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

    Continue reading